​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.!

Published : May 08, 2022 3:52 PM

சென்னையில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.!

May 08, 2022 3:52 PM

சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். கோவிந்தசாமி நகரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 29ம் தேதி முதல்  300க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகள் துவங்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இன்று வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்ணையா என்ற முதியவர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்டித்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

தீக்காயமடைந்த அவரை மீட்ட  போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.