​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்... 2 நோயாளிகள் உயிரிழப்பு.!

Published : May 08, 2022 1:52 PM

போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்... 2 நோயாளிகள் உயிரிழப்பு.!

May 08, 2022 1:52 PM

தென்னாப்பிரிக்காவில், மருத்துவமனையில் ஒரு நபர் போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 2 நோயாளிகள் உயிரிழந்தனர்.

போலீசாரின் விசாரணையில் இருந்த 40 வயதான அந்த நபருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், கேப் டவுனில் உள்ள சோமர்செட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சென்றதும் அந்த நபர் போலீஸ் அதிகாரி ஒருவரின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி, போலீசின் தலையில் சுட்டதோடு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில், அந்த போலீஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.