​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!

Published : May 08, 2022 10:54 AM

அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!

May 08, 2022 10:54 AM

ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக், அதிபரின் உத்தரவின் பேரில் அசோவ்ஸ்டலில் இருந்து மக்களை வெளியேற்றும் மனிதாபிமான பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோவியத் கால சுரங்கப்பாதைகளிலும், அசோவ்ஸ்டல் உருக்காலையின் அடியில் உள்ள பதுங்குக் குழிகளிலும் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.