​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவர்கள் மீது தாக்குதல், பொய் வழக்குகள்.. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வேதனை..!

Published : May 08, 2022 8:39 AM

மருத்துவர்கள் மீது தாக்குதல், பொய் வழக்குகள்.. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வேதனை..!

May 08, 2022 8:39 AM

மருத்துவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்களைக் கண்டு வேதனைப்படுவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களின் சேவைக்கு தமது மரியாதையை செலுத்துவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், மருத்துவர்கள் நமது நண்பர்கள் என்றும், அவர்கள் சமூகத்தில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தீர்க்கும் பணியைத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவதும் கண்டு வேதனைப்படுவதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்