​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை.!

Published : May 08, 2022 7:18 AM

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை.!

May 08, 2022 7:18 AM

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சர்கள், கல்வி, தொழில்நுட்பம் தொடர்பான பல்துறை அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

தேசிய தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தேசியக் கல்விக் கொள்கை அணுகுதல், சமத்துவம், தரம் ஆகிய குறிக்கோள்களுடன் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறினார்.

பள்ளிக் குழந்தைகள் அதிகப்படியான தொழில்நுட்ப வெளிப்பாட்டைத் தவிர்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் கற்றல் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

படிப்பை பாதியில் நிறுத்திய பள்ளிக் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, உயர் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டிருப்பது உள்ளிட்டவை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து, செழுமைப்படுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆய்வுக்கூடங்கள் உள்ள பள்ளிகளை, மண் பரிசோதனைக்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

தேசிய வழிகாட்டுதல் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.