​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஜஸ்வந்த்சிங்கிற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை.. ரூ.16.57 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி, ஆவணங்கள் சிக்கின..!

Published : May 08, 2022 7:16 AM

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஜஸ்வந்த்சிங்கிற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை.. ரூ.16.57 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி, ஆவணங்கள் சிக்கின..!

May 08, 2022 7:16 AM

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் எம்.எல்.ஏ ஜஸ்வந்த் சிங்கிற்கு சொந்தமான மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சுமார் 41 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பான வழக்கில் ஜஸ்வந்த் சிங்கின் வங்கிக் கணக்குகள், சொத்துகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

88 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 16 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் போன்றவையும் இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

40 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக பேங்க் ஆப் லூதியானா அளித்த புகாரின் பேரில் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட 8 தனி நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.