​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரண்டு மாடி குடியிருப்பு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்..!

Published : May 08, 2022 7:04 AM

இரண்டு மாடி குடியிருப்பு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்..!

May 08, 2022 7:04 AM

மத்தியப் பிரதேசம் இந்தூரில் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

தனது காதலி மீதான கோபத்தில் அந்தக் கட்டடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவளுடைய இருசக்கர வாகனத்துக்குத் தீ வைத்த சுபம் தீக்சித் என்ற வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.