​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகரையே உருக்குலைத்த காட்டுத் தீ...8 பேர் உயிரிழப்பு..அவசர நிலை பிரகடனம்!

Published : May 08, 2022 6:52 AM

நகரையே உருக்குலைத்த காட்டுத் தீ...8 பேர் உயிரிழப்பு..அவசர நிலை பிரகடனம்!

May 08, 2022 6:52 AM

சைபீரியாவின் கிரஸ்னயார்ஸ்க் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திடீரென பற்றிய தீ குடியிருப்புகளுக்கு பரவி காட்டுத் தீயாய் மாறியது. 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சிதிலமாக்கிய காட்டுத் தீ, 350க்கும் மேற்பட்ட கட்டடங்களை உருக்குலைத்தன.

மோசமான வானிலையால் கட்டுக்கடங்காமல் தீ பரவி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.