​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூரில் 45 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!

Published : May 07, 2022 9:52 PM

திருவாரூரில் 45 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!

May 07, 2022 9:52 PM

திருவாரூர் மாவட்டம் குடவாசலில், 45 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மூலங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்ற அந்த நபர் நியாயவிலைக்கடை ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

பெற்றோர் இறந்துவிட்டதால் திருமணம் ஆகாமல் தனிமையில் வசித்து வந்த செந்தில்குமார், கடைசி காலத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லையே என நண்பர்களிடம் புலம்பி வந்தார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் செந்தில்குமாரை கடந்த ஒருவாரமாக காணாமல் நண்பர்கள் தேடி வந்துள்ளனர்.

வீடும் பூட்டியிருந்ததால் வெளியூர் சென்றிருக்கலாம் என எண்ணியிருந்த நிலையில், செந்தில்குமாரின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. தகவலறிந்து போலீசார் வந்து பார்த்தபோது, செந்தில்குமாரின் சடலம் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் கிடந்துள்ளது.