​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டு வாசலில் உறங்கும் பெண்களை நோட்டம் விட்டு, நள்ளிரவில் நகைகளைப் பறித்துச் செல்லும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள்.!

Published : May 07, 2022 9:06 PM



வீட்டு வாசலில் உறங்கும் பெண்களை நோட்டம் விட்டு, நள்ளிரவில் நகைகளைப் பறித்துச் செல்லும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள்.!

May 07, 2022 9:06 PM

நாமக்கல் அருகே காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்து உறங்கும் பெண்களைக் குறிவைத்து, நகைப்பறிப்பில் ஈடுபடும் கும்பலை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகிறார்கள்.

என்.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆரியமாலா என்பவர், காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்துக் உறங்கினார். நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்தனர்.

கண் விழித்து மூதாட்டி சப்தமிடவே, அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பினர். 2 தினங்களுக்கு முன் அதே பகுதியில் வீட்டு வாசலில் கணவருடன் உறங்கிய நதியா என்பவரின் நகையையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.

இரவு நேரங்களில் வெளியில் உறங்குவதையும் காற்றோட்டத்துக்காக கதவை திறந்துவைத்து உறங்குவதையும் தவிர்க்குமாறு ஒலிப்பெருக்கி வாயிலாக போலீசார் எச்சரித்து வருகின்றனர்.