​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ஆயுதப்படை காவலர் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!

Published : May 07, 2022 7:16 PM

சென்னையில் ஆயுதப்படை காவலர் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!

May 07, 2022 7:16 PM

சென்னை அம்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் 10 லட்ச ரூபாயை பறிகொடுத்த ஆயுதப்படை காவலர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்ற அந்தக் காவலர், கள்ளிக்குப்பம் மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

மதியம் கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. சக பணியாளர்கள் சென்று கழிவறை கதவை உடைத்துப் பார்த்தபோது, தாம் வைத்திருந்த துப்பாக்கியாலேயே கழுத்துப் பகுதியில் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, 10 லட்ச ரூபாய் வரை இழந்து சரவணக்குமார் மன உளைச்சலில் இருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சரவணக்குமாருக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது என்ற தகவலும் தெரியவந்துள்ளது.