​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கியில் பணம் எடுத்து சென்றவரிடம், சாலையில் பணம் கிடப்பதாக திசைத்திருப்பி 1 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவிக்காட்சிகள்.!

Published : May 07, 2022 6:14 PM



வங்கியில் பணம் எடுத்து சென்றவரிடம், சாலையில் பணம் கிடப்பதாக திசைத்திருப்பி 1 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவிக்காட்சிகள்.!

May 07, 2022 6:14 PM

சென்னை அடுத்த திருநின்றவூரில் சாலையில் பணம் கிடப்பதாக திசைத்திருப்பி, வங்கியில் பணம் எடுத்து சென்றவரிடம் ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்றவர்களை போலீசார் சிசிடிவிக் காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

திருநின்றவூர் அம்பிகைபுரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவரை 2 பைக்குகளில் 4 பேர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது சாலையில் சில ரூபாய் நோட்டுகளை போட்ட இருவர் தியாகராஜனிடம் கீழே பணம் இருப்பதாக கூறி திசைத்திருப்ப, பைக்கை சாலையோரத்தில் நிறுத்திய அவர் பணத்தை எடுத்துக்கொண்டிருந்த போது, பைக்கின் முன் பக்கம் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை மற்றொரு பைக்கில் வந்த இருவர் திருடிச்சென்றனர்.

பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் உஷாராக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.