​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் - சென்னை மாநகராட்சி

Published : May 07, 2022 5:44 PM

குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் - சென்னை மாநகராட்சி

May 07, 2022 5:44 PM

சென்னை மாநகராட்சியில் உள்ள தனி நபர் இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குப்பைகளை தரம் பிரித்து வழங்காத இல்லங்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அதன் பிறகும் குப்பைகளை தரம் பிரித்து தராத இல்லங்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.