​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்னேஷ் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி காவலர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணையை தொடர முதலமைச்சர் உத்தரவு

Published : May 06, 2022 8:08 PM

விக்னேஷ் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி காவலர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணையை தொடர முதலமைச்சர் உத்தரவு

May 06, 2022 8:08 PM

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி, தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிந்து விசாரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.