​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Published : May 06, 2022 7:38 PM

விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

May 06, 2022 7:38 PM

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 9 பேரிடம் ஏழு மணி நேரத்திற்கு மேல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமைச் செயலக காலனி போலீசாரின் விசாரணைக்கு சென்ற விக்னேஷ், கடந்த 19ஆம் தேதி மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிபிசிஐடி அனுப்பிய சம்மன் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய போலீசார் 9 பேர் காலையில் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணையின்போது, பெண் காவலர் ஆனந்தி, விக்னேஷ் தாக்கப்பட்டது குறித்தும், மருத்துவமனைக்கு அவர் எந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறித்தும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.