​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிபோதையில் சாலையில் விழுந்து கிடந்த முதியவரையும் அவரிடம் கிடந்த ரூ.22 ஆயிரம் பணத்தையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 சிறுவர்கள்.!

Published : May 06, 2022 3:03 PM



குடிபோதையில் சாலையில் விழுந்து கிடந்த முதியவரையும் அவரிடம் கிடந்த ரூ.22 ஆயிரம் பணத்தையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 சிறுவர்கள்.!

May 06, 2022 3:03 PM

சென்னையில் குடிபோதையில் சாலையில் விழுந்து கிடந்த முதியவரையும் அவர் அருகே கிடந்த 22 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 சிறுவர்களை அண்ணாநகர் துணை கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கமலக்கண்ணன் என்ற அந்த முதியவர் அண்ணா நகர் பேருந்து நிலையம் அருகே இரவில் சுயநினைவு இல்லாமல் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியே குடும்பத்தாருடன் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த லிக்கித்,யோஜித், கிரிதிக் ஆகியோர் அவரை மீட்டு அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முதியவருக்கு அறிவுரை கூறிய போலீசார் அவரது பணத்தையும் கொடுத்து அனுப்பினர். இதனையடுத்து சிறுவர்களின் செயலை பாராட்டும் விதமாக அண்ணா நகர் துணை கமிஷனர் சிவ பிரசாத் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி இனிப்பு வழங்கி ஊக்கப்படுத்தினார்.