​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில்வே தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம்.. 5 பேர் கைது - தலைமறைவாக உள்ள இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

Published : May 06, 2022 12:54 PM



ரயில்வே தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம்.. 5 பேர் கைது - தலைமறைவாக உள்ள இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

May 06, 2022 12:54 PM

புதுச்சேரியில், ரயில்வே தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு, காராமணிக்குப்பம் பகுதியில், கோவில் திருவிழா நடைபெற்ற இடத்திற்கு அருகே நாட்டு வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அங்கு விரைந்த போலீசார் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மேலும் 5 நாட்டுவெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

கோவில் திருவிழாவிற்கு வர இருந்த  புதியவன் என்ற ரவுடியை, முன் விரோதத்தால் அவர்கள் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும், வரும் வழியில் ரயில்வே தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு ஒன்று தவறி விழுந்து வெடித்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.