​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!

Published : May 06, 2022 10:16 AM



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!

May 06, 2022 10:16 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் சுமார் 3 ஆயிரத்து 888 தேர்வு மையங்களில் 9.38 லட்சம் மாணவ, மாணவிகளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனித் தேர்வர்களும் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்காக 3 ஆயிரத்து 50 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.