​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம்.. அயனாவரம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் 14 மணி நேரம் விசாரணை

Published : May 06, 2022 8:24 AM

காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம்.. அயனாவரம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் 14 மணி நேரம் விசாரணை

May 06, 2022 8:24 AM

சென்னையில் காவல் நிலைய விசாரணையின் போது விக்னேஷ் என்பவர் மரணம் அடைந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 14 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் தாக்கப்பட்ட உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக  அயனாவரம் காவல் நிலையத்தில் தடயவியல் துறை மற்றும் டிஎஸ்பி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விக்னேஷ் கைது செய்யப்பட்ட அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்கள் மற்றும் அன்றைய தினம்  போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர்.