​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் சரக்கு ஆட்டோவில் மனைவியையும், மகள்களையும் அடைத்து தீ வைத்து கொளுத்திய நபர்.. தன் மீதும் தீயை வைத்து தற்கொலை.!

Published : May 05, 2022 10:05 PM

கேரளாவில் சரக்கு ஆட்டோவில் மனைவியையும், மகள்களையும் அடைத்து தீ வைத்து கொளுத்திய நபர்.. தன் மீதும் தீயை வைத்து தற்கொலை.!

May 05, 2022 10:05 PM

கேரள மாநிலம் மலப்புரத்தில் சரக்கு ஆட்டோவில் மனைவியையும் மகள்களையும் அடைத்து தீ வைத்து கொளுத்திய நபர் ஒருவர் தன் மீதும் தீயை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

கொண்டிபரம்பா பகுதியை சேர்ந்த மொஹமத் என்ற அந்த நபர் மீது போக்சோ வழக்கு ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சரக்கு ஆட்டோவிற்குள் மனைவியையும், இரு மகள்களையும் உட்கார வைத்த மொஹமத், அவர்கள் வெளியே வராதபடி பூட்டி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

பிறகு தன் மீதும் தீ வைத்துக்கொண்ட அவர், அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். தீயில் கருகி அவரது மனைவியும் 11 வயது மூத்த மகளும் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 5 வயது இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.