​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டில் தற்போது நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங்

Published : May 05, 2022 9:38 PM

நாட்டில் தற்போது நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங்

May 05, 2022 9:38 PM

நாட்டில் தற்போது நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும், மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் சிறு, குறு தொழில்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய சிறு, குறு தொழில்கள் துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

கோவையில் தேசிய கயிறு வாரியம் சார்பில் 2 நாட்கள் தேசிய கயிறு மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்றபின் பேட்டியளித்த மத்திய அமைச்சர், சிறு, குறு தொழில்களில் மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், கோவையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கயிறு வளர்ச்சி வணிக நிறுவனம் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.