​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து

Published : May 05, 2022 8:13 PM



புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து

May 05, 2022 8:13 PM

புதுச்சேரி அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருபுவனைபாளையத்தில் செயல்பட்டு வரும் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் இருந்தனர்.

அப்போது, தொழிற்சாலையின் ஒரு பகுதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, தொழிற்சாலை முழுவதும் தீப்பரவி, வான் உயர கரும்புகை வெளியேறியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.