​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் பிரபல தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை.!

Published : May 05, 2022 8:07 PM

சென்னையில் பிரபல தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை.!

May 05, 2022 8:07 PM

சென்னையில் பிரபல தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அந்த வீட்டில் வீட்டு வேலை செய்த நபர் திருடிச்சென்றதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வேப்பேரியில் வசித்து வரும் ஜெயின் கல்லூரி குழுமத்தின் உரிமையாளர் விகாஷ் முனோத்தின் வீட்டில் பீகாரை சேர்ந்த கரண் என்ற 22 வயது நபர் வேலை செய்து  வந்துள்ளார்.

இந்நிலையில், தங்கம், வைர நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கத்தை அந்த நபர் திருடிச் சென்றதாகவும், இது குறித்து போலீசில் புகார் கொடுத்தால் விகாஷ்-ன் தந்தையின் தனிப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என குறிப்பு ஒன்றையும் அந்த நபர் எழுதிவிட்டு சென்றுள்ளதாகவும் விகாஷ் புகார் கொடுத்துள்ளார். அந்த குறிப்பை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.