​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீன் வியாபாரியின் பைக்கை தண்டவாளத்தில் தீ வைத்து கொளுத்திய மர்ம கும்பல் - போலீசார் விசாரணை!

Published : May 05, 2022 7:16 PM

மீன் வியாபாரியின் பைக்கை தண்டவாளத்தில் தீ வைத்து கொளுத்திய மர்ம கும்பல் - போலீசார் விசாரணை!

May 05, 2022 7:16 PM

ராமேஸ்வரத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதற்காக மீன் வியாபாரியின் பைக்கை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெய்யம்புளியைச் சேர்ந்த மீன் வியாபாரியான ராஜசேகர் நேற்றிரவு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மர்ம நபர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இதனை தட்டிக்கேட்ட ராஜசேகரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவே, சொல்லி, சொல்லி பார்த்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார் ராஜசேகர்.

தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்கச் சொன்னதை தன்மான பிரச்சனையாக கருதிய அந்த போதை கும்பல், ராஜசேகரை பின் தொடர்ந்து சென்று அவரது வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை எடுத்து வந்து தண்டவாளத்தில் வைத்து தீ வைத்து கொளுத்துவிட்டு தப்பியுள்ளனர்.

பைக் எரிந்து கொண்டிருப்பதை பார்த்த ரயில் எஞ்சின் ஓட்டுநர், பாதி வழியில் ரயிலை நிறுத்தி, போலீசாருக்கு தகவல் அளித்த பிறகு, தண்டவாளத்தில் இருந்து பைக் அப்புறப்படுத்தப்பட்டது.