​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காணொலி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை

Published : Apr 12, 2022 3:56 PM



காணொலி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை

Apr 12, 2022 3:56 PM

காணொலி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர்நீதிமன்ற காணொலி விசாரணையின் போது, நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி பி.என் பிரகாஷ் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. அதன் விசாரணையில், வழக்கறிஞருக்கு சிறை தண்டனையுடன், ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்தது.