​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 11 சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Published : Apr 12, 2022 3:15 PM



இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 11 சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

Apr 12, 2022 3:15 PM

சேலத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பெண் அணிந்திருந்த 11 சவரன் தாலி செயினை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

சீலநாயக்கன்பட்டி அழகுநகர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண், சாதகாப்பட்டி பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பைபாஸ் அருகே அவர் சென்றபோது, துணிகரம் நடைபெற்றுள்ளது. இது குறித்து பிரியா அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.