​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில் தரிசனத்திற்கு டோக்கன் கிடைக்காததால் தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

Published : Apr 12, 2022 1:57 PM

திருப்பதியில் தரிசனத்திற்கு டோக்கன் கிடைக்காததால் தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

Apr 12, 2022 1:57 PM

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதியில் இலவச தரிசனத்திற்காக நாளொன்றுக்கு 30 ஆயிரம் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச டோக்கன் விநியோகம் இன்று நடைபெற்றது.

இதனை, பெற நேற்றிரவு முதலே 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்த நிலையில் முண்டியடித்துக்கொண்டு பலர் டோக்கன்களை பெற்று சென்றனர். இதனால் பெரும்பாலானோருக்கு டோக்கன் கிடைக்காததால் பக்தர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நாளை முதல் வரும் ஞாயிற்றுகிழமை வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.