​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் கோவில் கோபுரத்தில் இருந்த பழமையான ஐம்பொன் கலசங்கள் திருட்டு.!

Published : Apr 12, 2022 1:47 PM

திருச்சியில் கோவில் கோபுரத்தில் இருந்த பழமையான ஐம்பொன் கலசங்கள் திருட்டு.!

Apr 12, 2022 1:47 PM

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கோவில் ஒன்றின் கோபுரத்தில் இருந்த பழமையான ஐம்பொன் கலசங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக திருடிச்சென்றுள்ளனர்.

மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் கோபுரத்தின் மீது 5 கலசங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பழுதடைந்த ஒரு கலசத்தை 5 மாதங்களுக்கு முன்னர் கிராம மக்களே அகற்றி எடுத்து வைத்த நிலையில், மீதமிருந்த 4 கலசங்களில் மூன்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும், ஒரு கலசத்தை அகற்ற முயற்சி செய்தும் அதை எடுக்க முடியாததால் அதை அப்படியே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.