​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் போதைக்கு வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது.!

Published : Apr 12, 2022 1:24 PM



சென்னையில் போதைக்கு வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது.!

Apr 12, 2022 1:24 PM

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், போதைக்கு வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்  உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதில், திருப்பதியை சேர்ந்த மருந்தக உரிமையாளர்,  முகப்பேரைச் சேர்ந்த மருந்து மொத்த விற்பனையாளர், மருந்தக ஊழியர் உள்ளிட்ட 4 பேருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 வகையான மயக்க மாத்திரைகள், வலி நிவாரணி மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின்றி போதைக்காக விற்பனை செய்யப்பட்டது அம்பலமானது.

இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.