​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசியில் பெய்த மழையால் வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே பலி.!

Published : Apr 12, 2022 12:43 PM

தென்காசியில் பெய்த மழையால் வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே பலி.!

Apr 12, 2022 12:43 PM

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் நேற்று பெய்த மழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த தாயார் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வாகைக்குளம் வடக்குத் தெருவில் பழமையான வீடு திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

வீடு இடிந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட தந்தை, அவரது மகள் ரேவதி ஆகியோரை சடலமாக மீட்டனர். படுகாயமடைந்த வேலம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.