​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலுங்கானா கைத்தறி சங்கம் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து.!

Published : Apr 12, 2022 12:03 PM

தெலுங்கானா கைத்தறி சங்கம் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து.!

Apr 12, 2022 12:03 PM

தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வாரங்கல் மாவட்டம், தர்மராம் பகுதியில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான இந்த குடோனின் ஒரு பகுதியில் தீ பற்றியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்து, தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாக குடோன் முழுவதும் தீ பரவி, கொளுந்துவிட்டு எரிந்தது.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில், குடோனில் இருந்த அரசு பள்ளி சீருடைகள் உட்பட மொத்தம் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.