​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிலிப்பைன்ஸில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளச் சேதங்களில் சிக்கி 25 பேர் பலி.!

Published : Apr 12, 2022 6:39 AM

பிலிப்பைன்ஸில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளச் சேதங்களில் சிக்கி 25 பேர் பலி.!

Apr 12, 2022 6:39 AM

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மெகி புயல் மற்றும் அதனால் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளச் சேதங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.

லெய்டே உள்ளிட்ட மாகாணங்களில் மெகி புயலின் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் சுற்றுவட்டார கிராமங்கள் நீரில் மூழ்கின.

கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச் சரிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித் தனித் தீவுகளாக மாறின. பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த 25 பேரின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

ஏறத்தாழ 13 ஆயிரம் பேர் வீடு வாசல்களை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். மின் வெட்டு காரணமாக பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின.