​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜார்கண்டில் ரோப் கார்கள் மோதல் விபத்து - இரு பெண்கள் உள்பட 3 பேர் பலி

Published : Apr 12, 2022 6:34 AM



ஜார்கண்டில் ரோப் கார்கள் மோதல் விபத்து - இரு பெண்கள் உள்பட 3 பேர் பலி

Apr 12, 2022 6:34 AM

ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் ரோப் கார்களில் சிக்கி அந்தரத்தில் தவிப்பவர்களை மீட்கும் பணி 2-வது நாளாக இன்று நடைபெறுகிறது.

கடந்த ஞாயிற்றுகிழமை திரிகூட் மலை குன்றுகளுக்கிடையே 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற இரு ரோப் கார் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியின் போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

அந்தரத்தில் சிக்கித் தவிப்பவர்களில் 27 பேரை விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.

போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது. 20 பேர் ரோப் காரில் சிக்கி உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ட்ரோன்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.