​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைனில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த திரையரங்கின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீச்சு தாக்குதல்.!

Published : Apr 12, 2022 6:23 AM



உக்ரைனில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த திரையரங்கின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீச்சு தாக்குதல்.!

Apr 12, 2022 6:23 AM

உக்ரைனின் தெற்குப் பகுதி நகரமான மரியுபோலில் ரஷ்ய படைகள் நடத்திய கொடூர தாக்குதலில் மிகப்பெரிய திரையரங்கு ஒன்று உருக்குலைந்து காணப்படும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 16-ஆம் தேதி மரியுபோல் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த திரையரங்கின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் தியேட்டர் முற்றிலும் சேதமடைந்து இருப்பதாகவும், 300 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.