​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி

Published : Apr 11, 2022 5:34 PM

தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் பொன்முடி

Apr 11, 2022 5:34 PM

வரும் கல்வியாண்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி உள்ளிட்ட இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றார்.

மேலும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியல் பயில்வதற்கான திட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைப்பது, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் உயர்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.