​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் விமானம் தயாரிக்க வரும்படி 2 அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு

Published : Apr 11, 2022 2:54 PM

இந்தியாவில் விமானம் தயாரிக்க வரும்படி 2 அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு

Apr 11, 2022 2:54 PM

அமெரிக்காவில் போயிங், ரேதியான் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் விமானங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்க முன்வரும்படி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாஷிங்டன் சென்றுள்ள ராஜ்நாத் சிங், போயிங், ரேதியான் விமானத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது மேக் இன் இந்தியா, மேக் பார் த வேர்ல்டு ஆகிய கொள்கைகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியாவில் விமானங்கள், போர்த்தளவாடங்கள் தயாரிக்க முன்வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.