​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒட்டன்சத்திரம் அருகே மீண்டும் நிலநடுக்கம்.. லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி..!

Published : Apr 11, 2022 1:47 PM



ஒட்டன்சத்திரம் அருகே மீண்டும் நிலநடுக்கம்.. லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி..!

Apr 11, 2022 1:47 PM

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொ. கீரனூர் பகுதியில் நேற்றிரவு மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

கொ.கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு 10.50 மணி அளவில் பயங்கர சத்ததுடன் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனால் பீதியடைந்த பொதுமக்கள் குடும்பத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படும் கொ.கீரனூர் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி நேரில் ஆய்வு செய்தனர்.

கடந்த மார்ச் 25ஆம் தேதி கொ.கீரனூர் பகுதியில் ஒரே நாளில் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.