​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓசூர் வழியாக சென்னைக்கு கடத்தப்பட இருந்த குட்கா பறிமுதல்.. ரூ.50 லட்சம் மதிப்புடைய 8 டன் பான் மசாலா பொருட்கள் பறிமுதல்

Published : Apr 11, 2022 11:01 AM

ஓசூர் வழியாக சென்னைக்கு கடத்தப்பட இருந்த குட்கா பறிமுதல்.. ரூ.50 லட்சம் மதிப்புடைய 8 டன் பான் மசாலா பொருட்கள் பறிமுதல்

Apr 11, 2022 11:01 AM

பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக சென்னைக்கு லாரியில் கடத்தப்பட இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 டன் அளவிலான குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரியில் உள்ள பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திகிரி போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லாரி ஒன்றை சோதனையிட்ட போது அதில் மூட்டை மூட்டையாக குட்கா, பான் மசாலா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநர் மற்றும் உடன் வந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பெங்களூரை சேர்ந்த ராமநாதன் என்பவர் சென்னைக்கு குட்காவை அனுப்பி வைத்தது தெரிய வந்திருப்பதையடுத்து அவரையும் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.