​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பீகாரில் பாலத்தை காணவில்லை என்று புகார் தெரிவித்த ஊர் மக்கள்.. பாலத்தை திருடிய 8 பேர் கொண்ட கும்பல் கைது.!

Published : Apr 11, 2022 7:06 AM

பீகாரில் பாலத்தை காணவில்லை என்று புகார் தெரிவித்த ஊர் மக்கள்.. பாலத்தை திருடிய 8 பேர் கொண்ட கும்பல் கைது.!

Apr 11, 2022 7:06 AM

பீகாரில் உள்ள ரோட்டாஸ் மாவட்டத்தில் ஒரு பாலத்தையே காணவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்த இரும்பு பாலம் இரவோடு இரவாக காணாமல் போனதையடுத்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிலர் நீர்வளத்துறை அதிகாரிகள் போல நாடகமாடி பாலத்தை பெயர்த்து விட்டதாக ஊர்மக்கள் புகார் கூறினர். இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீசார் அரசு அதிகாரியின் உதவியுடன் பாலத்தைத் திருடிய 8 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம், 247 கிலோ எடை கொண்ட இரும்புக் கம்பிகள் மற்றும் இதரப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்