சென்னையில், பாலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பால் கிரேட்களை ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
திருவல்லிக்கேணியில் உள்ள பாலகத்தின் முன் அதிகாலை அடுக்கி வைக்கப்பட்டிருந்த பால் கிரேட்டுகள் திடீரென குறைந்துள்ளது. சந்தேகமடைந்த கடை உரிமையாளர் செந்தில், அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இருசக்கர வாகனத்தில், ஹெல்மட் அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர் 3 கிரேட்களை பால் பாக்கெட்டுகளுடன் திருடிச் சென்றது தெரியவந்தது.
40 லிட்டர் பால் திருடு போனது குறித்து செந்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.