​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைக்கில் சென்ற போது வழிமறித்து கத்தியால் தாக்கி, தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.82 லட்சம் பணம் பறிப்பு

Published : Apr 10, 2022 8:35 PM

பைக்கில் சென்ற போது வழிமறித்து கத்தியால் தாக்கி, தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.82 லட்சம் பணம் பறிப்பு

Apr 10, 2022 8:35 PM

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரு சக்கர வாகனத்தில் 82 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்ற தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரவாயலில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜயகுமார் என்பவர், ஒரு பெரிய பையில் 82 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு கொடுங்கையூரில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு சென்றுக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் தாம்பரம்- புழல் புறவழிச்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியால் கைகளில் சரமாறியாக வெட்டி விட்டு, பணத்தை பறித்து தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.