​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில்களில் திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு

Published : Apr 10, 2022 4:11 PM

கோவில்களில் திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு

Apr 10, 2022 4:11 PM

ந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 8 கோவில்களில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் திருநீறு, குங்குமம் தயாரித்து வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சேகர் பாபு, நாசர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்கள், காணொளி வாயிலாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உட்பட 8 கோவில்களில் திருநீறு, குங்குமம் தயாரிக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.