​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்

Published : Apr 10, 2022 3:47 PM

ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்

Apr 10, 2022 3:47 PM

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ள நிலையில், நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரோஜா அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2019ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன் படி, கடந்த 7ஆம் தேதி 24 அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், நாளை புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ள நிலையில், புது முகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில், ஆந்திராவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உதயமான நிலையில், மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் அமைச்சர்களாக பதவி ஏற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.