​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
161 அடி உயரமுள்ள உலகிலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை கர்நாடகாவில் திறப்பு

Published : Apr 10, 2022 3:14 PM



161 அடி உயரமுள்ள உலகிலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை கர்நாடகாவில் திறப்பு

Apr 10, 2022 3:14 PM

கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தில் 161 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்துள்ளார்.

தும்கூர் மாவட்டம் பினதக்கரையில் உள்ள பசவேசுவரர் மடத்தில் 161 அடி உயரமுள்ள மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலை எனக் கருதப்படுகிறது.

ராமநவமி நாளான இன்று ஆஞ்சநேயர் சிலையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். நிகழ்ச்சயில் பசவேசுவரா மடத்தின் அதிபதி தனஞ்செயா மற்றும் பிற மடங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.