​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துனிசியாவில் அகதிகளுடன் சென்ற இரு படகு நீரில் மூழ்கியதில் 13 பேர் பலி..

Published : Apr 10, 2022 9:04 AM

துனிசியாவில் அகதிகளுடன் சென்ற இரு படகு நீரில் மூழ்கியதில் 13 பேர் பலி..

Apr 10, 2022 9:04 AM

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதில் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கி 50க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகு திடீர் விபத்தால் நீரில் மூழ்கியது.

தண்ணீரில் தத்தளித்தவர்களை அருகில் உள்ள கிராம மக்கள் மீட்டனர். 13 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 37 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. காணாமல் போன பெற்றோரை குழந்தைகள் தேடி அலையும் காட்சி காண்போரை கணக்கச் செய்கிறது.