​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

Published : Apr 09, 2022 8:36 PM

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

Apr 09, 2022 8:36 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செல்போனில் ஆபாசம் படம் காண்பித்து பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இளையரசனேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரான 57 வயதான தாமஸ்சாமுவேல், பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 9 பள்ளி சிறுமிகளுக்கு தாமஸ் சாமுவேல் ஆபாசம் படம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து அவரை கோவில்பட்டி போலீசார் கைது செய்தனர்.