​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில்வேயைத் தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Published : Apr 09, 2022 7:10 PM

ரயில்வேயைத் தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Apr 09, 2022 7:10 PM

ரயில்வேயைத் தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நவீனத் தொழில்நுட்பத்தை ஏற்க வேண்டிய தேவையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே மஸ்தூர் சங்கத்தின் மாநாட்டைக் காணொலியில் தொடக்கி வைத்துப் பேசிய அவர், பயணிகளின் பாதுகாப்பு, வசதி ஆகியவற்றைக் கருதிப் புதிய தொழில்நுட்பங்களை ஏற்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையின் பங்களிப்பான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போல உள்நாட்டுத் தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.