​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக தொடங்கிய கோவை விழா.. மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடக்கி வைப்பு

Published : Apr 09, 2022 5:17 PM

2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக தொடங்கிய கோவை விழா.. மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடக்கி வைப்பு

Apr 09, 2022 5:17 PM

2 ஆண்டுகளுக்கு பிறகு கலைப்படைப்புகளின் கண்காட்சியுடன் கோவை விழா கோலாகலமாக தொடங்கியது.

கோயம்புத்தூரின் பெருமைகளை பறைசாற்றவும், எடுத்துரைக்கும் வகையிலும், ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டிற்கான விழா இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதையொட்டி, ரேஸ்கோர்ஸில் உள்ள நடைபாதையில் “ஆர்ட் ஸ்ட்ரீட்” என்னும் நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இதில் சித்திரம் வரைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, கலைப்படைப்புகளும் விற்பனை செய்யப்படுகிறது.