​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் 3வது முறையாக போலீசாரிடமிருந்து தப்பியோட்டம்.!

Published : Apr 09, 2022 4:55 PM

சேலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் 3வது முறையாக போலீசாரிடமிருந்து தப்பியோட்டம்.!

Apr 09, 2022 4:55 PM

சேலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் 3வது முறையாக போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தப்பியோடிய நிலையில், அவனைத் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த அந்தச் சிறுவன், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தான்.

சில தினங்களில் அங்கிருந்து தப்பியோடிய சிறுவனை போலீசார் கண்டுபிடித்து வந்து இல்லத்தில் அடைத்தனர். தொடர்ந்து சக சிறுவர்களுடனான மோதலில் காயமடைந்த சிறுவன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.

அங்கிருந்து காவலர்களை ஏமாற்றிவிட்டு 2வது முறையாக தப்பியோடிய சிறுவனை திருச்செங்கோட்டில் வைத்து போலீசார் மடக்கினர். பின்னர் சிறுவன் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டான்போஸ்கோ சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.

அங்கு சில தினங்கள் அமைதியாக இருந்தவன், பென்சில் ஷார்ப்பனரில் உள்ள பிளேடை பிரித்து எடுத்து, கையை அறுத்துக்கொள்வேன் என மிரட்டிவிட்டு தப்பியோடினான் என்று கூறப்படுகிறது. 3வது முறையாக தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.