​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வுகளின்போது அனுமதிச் சீட்டின்றி யாரையும் அனுமதிக்கக்கூடாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published : Apr 09, 2022 3:25 PM

சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வுகளின்போது அனுமதிச் சீட்டின்றி யாரையும் அனுமதிக்கக்கூடாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Apr 09, 2022 3:25 PM

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளின்போது அமைச்சரோ, நீதித்துறையினரோ யாராக இருந்தாலும் அனுமதிச்சீட்டு இன்றி போலீசார் அனுமதிக்கக்கூடாது என திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளல் நிகழ்விற்காக வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், விழாவிற்கான பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் தலையிட வேண்டாம் என்றும் கூறினார்.